search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை"

    பாகூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் புதிய காமராஜர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள கோவிந்தன் வேலை முடிந்து மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது அடிக்கடி முன் கோபம் ஏற்பட்டு கோபித்து கொள்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு கோவிந்தன் வீட்டில் சாப்பிட்டு விட்டு திடீரென மனைவியுடன் கோபித்து கொண்டார். பின்னர் கோவிந்தன் தனியாக தூங்க சென்றார். வழக்கம் போல் கணவன் கோபித்து செல்வதாக கோவிந்தம்மாள் எண்ணினார்.

    இன்று காலை 5 மணிக்கு கோவிந்தம்மாள் தூங்கி எழுந்து பார்த்த போது வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் கணவர் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து கோவிந்தன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம்- தர்மாபுரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள சிவக்குமார் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தார்.

    மேலும் வேலைக்கு சென்றாலும் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார். இதனை அவ்வப்போது சாந்தி தட்டிக்கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    அதுபோல் நேற்று முன்தினம் சிவக்குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது, கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் மனைவியின் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் பாகூர் அருகே குருவி நத்தம் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (71). இவர் வயது முதிர்ச்சியினாலும், நோய் கொடுமையாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் படுக்கை அறையில் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமம் அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி லட்சுமி. இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதற்கிடையே செல்வத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று செல்வம் உடல்நலக்குறை வால் கட்டிட வேலைக்கு செல்லவில்லை. லட்சுமி மட்டும் கட்டிட வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் செல்வத்துக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×